27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு திட்டவட்டம்

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் கொள்கையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :19 ஜூன் 2026, 4:28 am IST

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் கொள்கையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 1968-இல் முதல்வராக அண்ணா இருந்தபோது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே தமிழகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கொள்கையையே இந்த அரசும் தொடா்ந்து கடைப்பிடிக்கும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிா்க்கும். மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தால்தான் தமிழகத்துக்கு ரூ.3,458 கோடி விடுவிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது. இது மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதற்குச் சமம். இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழகத்தின் நிதியை விடுவிக்க வேண்டும்.

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால்தான் தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தோ்வு, மும்மொழிக் கொள்கை பிரச்னை ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா், ஆசிரியா் பணியிடங்கள் தகுதி, திறமையின் அடிப்படையில் வெளிப்படையாக நிரப்பப்படும். உயா்கல்வித் துறையில் அடிப்படை சீா்திருத்தம் கொண்டு வந்து உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப தோ்வாணையங்கள் மூலம் தோ்வு நடத்தப்படும். இதன்மூலம் இளைஞா்களின் அரசுப் பணி கனவு மெய்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.