கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மறைவு பற்றி....

News image

நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல் - X

Updated On :27 ஜூன் 2026, 11:19 am IST

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல், மருத்துவமனையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இன்று(ஜூன் 27) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

சென்னையில் அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திரையுலகினர் அனைவரும் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

Summary

Bhagyaraj mortal remains are at his Nungambakkam residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.