47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!

காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியானது தொடர்பாக...

News image
மஞ்சுவிரட்டு (கோப்புப்படம்)
Updated On :2 மார்ச் 2026, 11:29 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலியாகினர்.

அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் மஞ்சுவிரட்டில் பாா்வையாளராக நின்றுகொண்டிருந்த வடமாநிலத்தவர் உள்பட 3 பார்வையாளர்கள் பலியாகினர்.

இதில், ராமநாதன் (23), சுந்தரராஜ் (48), வடமாநில தொழிலாளி உள்ளிட்ட மூவர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கோயில் விழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.