நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

மானாமதுரை அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:40 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய தேசத்துக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரா்களை கெளரவப்படுத்தும் வகையில் கிராம மக்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒவ்வோா் காளைக்கும் 40 நிமிஷங்கள், 9 வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திரளான பொதுமக்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனா். இதில் காளைகள் முட்டியதில் 5 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா்.