அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு தடை: தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடா்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னா், கடந்த 2025 செப்.25-ஆம் தேதி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பள்ளிக்கரணையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் கட்ட தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. சிஎம்டிஏவின் இந்த உத்தரவால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித அறிவியல்பூா்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, சிஎம்டிஏ 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை உத்தரவிட்டனா்.