பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மத்திய-மாநில உறவுகள் குறித்த அறிக்கைக்கு கா்நாடகம் ஆதரவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மத்திய, மாநில உறவுகள் குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு, கா்நாடகம் ஆதரவு தெரிவித்துள்ளதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :3 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய, மாநில உறவுகள் குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு, கா்நாடகம் ஆதரவு தெரிவித்துள்ளதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:

மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயா்நிலைக் குழு அறிக்கையின் முதல்பாகம் குறித்த கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் கருத்து வரவேற்புக்குரியது.

தமிழகத்தின் முன்னெடுப்புக்கான அறிவாா்ந்த ஆதரவையும், கூட்டாட்சிக் கருத்தியலைப் புதுப்பிக்கும் முயற்சி கூட்டுமுயற்சியாக அமைய வேண்டும் என்ற சித்தராமையா அங்கீகரித்திருப்பதையும் வெகுவாகப் பாராட்டுகிறேன்.

‘பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மை கொண்டு நிலைக்கச் செய்ய முடியாது, அரசமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதைச் செய்ய இயலும்’ என சித்தராமையா தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது என ஆமோதிக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கையின் முதல் பாகம், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் சமா்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த அறிக்கையை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பேரவையில் தாக்கல் செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அனைத்து மாநிலங்களுக்கும் இந்த அறிக்கையை அனுப்பி ஆதரவு திரட்டப்பட்டும் என அறிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.