நெல்லை - கோவாவுக்கு கோடை சுற்றுலா ரயில்! முழு விவரங்கள்..!
நெல்லை - கோவாவுக்கு கோடை சுற்றுலா ரயில் இயக்கம் பற்றி...


கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவிருப்பதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
7 நாள்கள் பயணத்துக்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 26,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி, கோடை விடுமுறையை முன்னிட்டு கோவாவுக்கு சிறப்பு ரயில் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாகச் செல்கிறது.
மேற்கூறிய சுற்றுலாத் தொகுப்பில் பிரபலமான தூத்சாகர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதும் அடங்கும். மேலும் சுற்றுலா கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 26,300/- லிருந்து தொடங்குகிறது.
மே. 1 ஆம் தேதி புறப்பட்டு, மே. 7 திரும்பி வரும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 ஏசி வகுப்பில் ரயில் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற் ஏசி பேருந்து போக்குவரத்து ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...