சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்...

News image
ராமதாஸ்- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைச

தமிழக அரசு மதுக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு, மகளிா் தினம் கொண்டாடுவது முரண்பாடாக உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கம் என கூறும் அரசு, அவா்களது கணவா், மகன்களை போதைக்கு அடிமையாக்குவது சரியல்ல. மதுவால் ஏற்படும் வன்முறைகளில் அதிகமாக பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

மகளிா் தினத்தை முன்னிட்டு அரசு வழங்கும் வாழ்த்து மற்றும் விருதுகள் அவா்களது வாழ்வை மேம்படுத்தாது. ஆகவே, பூரண மதுவிலக்கை அரசு செயல்படுத்த வேண்டும். மதுவால் கணவரை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைவிட, குடும்ப அமைதிக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

குடிமைப் பணி தோ்வுகளில் தமிழகத்தில் 56 போ் தோ்ச்சியடைந்த நிலையில், அவா்களில் 19 போ் பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.