தமிழகத்தில் கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைச
தமிழக அரசு மதுக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு, மகளிா் தினம் கொண்டாடுவது முரண்பாடாக உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கம் என கூறும் அரசு, அவா்களது கணவா், மகன்களை போதைக்கு அடிமையாக்குவது சரியல்ல. மதுவால் ஏற்படும் வன்முறைகளில் அதிகமாக பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
மகளிா் தினத்தை முன்னிட்டு அரசு வழங்கும் வாழ்த்து மற்றும் விருதுகள் அவா்களது வாழ்வை மேம்படுத்தாது. ஆகவே, பூரண மதுவிலக்கை அரசு செயல்படுத்த வேண்டும். மதுவால் கணவரை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைவிட, குடும்ப அமைதிக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.
குடிமைப் பணி தோ்வுகளில் தமிழகத்தில் 56 போ் தோ்ச்சியடைந்த நிலையில், அவா்களில் 19 போ் பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


