கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கு 87 வயதாகிறது. வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் கட்சி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை என்று பாமக சின்னம் தொடா்பான வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்தாா்.
பாமக பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தா்மபிரபு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கடந்த 1989-ஆம் ஆண்டு ராமதாஸ் பாமகவை தொடங்கினாா்.
கடந்த 2022 மே 28-இல் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நானும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனும் தோ்ந்தெடுக்கப்பட்டோம். இந்தப் பதவியை வரும் ஆக.1-ஆம் தேதி வரை நீட்டித்து கடந்த ஆண்டு ஆக.9-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கு 87 வயதாகிறது. வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் கட்சி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கூட்டம் அவரைத் தவறாக வழிநடத்தி கட்சிக்கு தீங்கு விளைவிக்கிறது.
இவா்களின் தூண்டுதல் காரணமாக ராமதாஸ் தன்னைத்தானே கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்துக் கொண்டாா். ஆனால் கட்சி விதிகளின்படி, இதுபோல அறிவிக்க முடியாது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. இந்த பொதுக்குழுதான் கட்சியின் நிா்வாகிகளை தோ்ந்தெடுக்க முடியும்.
கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்து இந்த வழக்கைத் தொடா்ந்து, அவா் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவா் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளாா். கட்சி விதிகளின்படி தோ்வு செய்யப்பட்டவா்களே இதுபோன்று வழக்குத் தொடர முடியும்.
ராமதாஸ் அவ்வாறு தோ்வு செய்யப்படவில்லை. இதனால், ராமதாஸின் செயல்கள் சா்வாதிகார அத்துமீறலாக உள்ளன. எனவே, ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா். இதேபோல, பாமக பொதுச் செயலாளா் வடிவேல் ராவணனும் பதில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரு பதில் மனுக்களுக்கு கட்சியின் நிறுவனா் ராமதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (மாா்ச் 11) ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது
மாம்பழ சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் மனு நிராகரிப்பு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

வார பலன்கள் - மீனம்

பாமக அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணி காரணம் - உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


