நானே கேஸ் டீலர்தான்; தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! - நயினார் நாகேந்திரன்
சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து...


தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,
"தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய்.
ஒருவருக்கு ஒரு சிலிண்டர் கொடுத்தபிறகு 20 நாள்களுக்குப் பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும். கணினி தொழில்நுட்பமே அப்படித்தான் இருக்கிறது. ஏனென்றால் நான் கேஸ் டீலர். அதனால் நான் சொல்கிறேன். தட்டுப்பாடு என்பது எங்குமே இல்லை. 20 நாள்களில் உங்களுக்கு சிலிண்டர் வேண்டும் என்றால் நான் தருகிறேன். உங்களுக்கு எங்கு வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவு குறைத்ததற்கும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உலகப் போரால் இந்தியாவில் பொருளாதார கட்டுப்பாடோ நெருக்கடியோ இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...