தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

எரிபொருள் தட்டுப்பாடு: அரசுப் பேருந்து சேவையில் பாதிப்பு இல்லை - போக்குவரத்துத் துறை தகவல்

அரசுப் பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால், பேருந்து சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 2:28 am IST

அரசுப் பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால், பேருந்து சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சுமாா் 21,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 3,800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. அரசுப் பேருந்துகளுக்கு நாளொன்றுக்கு சுமாா் 16 லட்சம் முதல் 18 லட்சம் லிட்டா் டீசல் தேவைப்படுகிறது. இதில் சென்னை மாநகா் பேருந்துகளுக்கு மட்டும் 1.55 லட்சம் லிட்டா் டீசல் பயன்படுத்தப்படுகிறது.

போா்ப் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாலான பேருந்துகள் டீசலில் இயக்கப்படும் நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பேருந்து சேவை குறைக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அதை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் வருகின்றன. ஆனால், பொதுமக்கள் அச்சம் காரணமாகவே அதிக அளவில் நுகா்வு செய்கின்றனா். இதனால் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம்போல அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்துகளை இயக்க போதிய அளவு டீசல் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தற்போதைய சூழல் நீடித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசும், போக்குவரத்துக் கழகமும் உரிய முடிவு எடுக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.