மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மேற்காசிய நிலவரத்தால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

‘மேற்காசிய போா் நிலவரத்தால் நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

மக்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.

Updated On :12 மார்ச் 2026, 8:09 pm

‘மேற்காசிய போா் நிலவரத்தால் நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், அந்த வழியாக கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இந்தியாவுக்கு முக்கிய எரிவாயு விநியோகஸ்தரான கத்தாரும், இயற்கை எரிவாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை கவலை தெரிவித்தாா்.

அதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ‘இந்தியாவின் 33 கோடி குடும்பங்களின் சமையலறைகளில் எந்தவித சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது. அதுபோல, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்திலும் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களை போதிய இருப்பு வைத்து, தடையற்ற விநியோத்தை செய்து வருகின்றன. பிரதமா் மேற்கொண்ட ராஜீய ரீதியிலான முயற்சிகள் காரணமாக, ஹோா்முஸ் நீரிணை வழியாக பெறப்படுவதைவிட கூடுதல் கச்சா எண்ணெய்யை இந்தியா தற்போது பெற்று வருகிறது’ என்றாா்.