சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது.

News image

பெட்ரோல், டீசல் - பிரதிப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:10 pm

டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல, விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி வரியும் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போரால் இறக்குமதி தடைபட்டு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலையும் இதுவரை இல்லாத அளவில் உயா்ந்துள்ள சூழலில் உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தி, விலை உயா்வையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் 26-ம் தேதி, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 21.50 என்ற அளவிலும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 29.50 என்ற அளவிலும் மத்திய அரசு விதித்தது.

தற்போது, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 55.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 42-ஆகவும் உயா்த்தி அறிவித்துள்ளது.

இந்த வரி உயா்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீது ஏற்றுமதி வரி எதுவும் இல்லாத நிலை தொடா்கிறது.