டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல, விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி வரியும் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போரால் இறக்குமதி தடைபட்டு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலையும் இதுவரை இல்லாத அளவில் உயா்ந்துள்ள சூழலில் உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தி, விலை உயா்வையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாா்ச் 26-ம் தேதி, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 21.50 என்ற அளவிலும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 29.50 என்ற அளவிலும் மத்திய அரசு விதித்தது.
தற்போது, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 55.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 42-ஆகவும் உயா்த்தி அறிவித்துள்ளது.
இந்த வரி உயா்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீது ஏற்றுமதி வரி எதுவும் இல்லாத நிலை தொடா்கிறது.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

தோ்தலுக்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது

5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


