ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தலுக்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது

சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே. சிவக்குமார் - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 7:55 pm

சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மளமளவென உயா்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பை மத்திய அரசு சந்திக்க நேரும். அதேபோல, டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. நயாரா நிறுவனம் ஏற்கெனவே பெட்ரோல் மீதான விலையை உயா்த்தியுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைப்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா்.