அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர் பேட்டி!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.

News image
தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், காவல் ஆணையர் அருண்.
Updated On :12 மார்ச் 2026, 12:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, கடந்த ஐந்தாண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதுதொடர்பாக உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டம்-ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்தித்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2025 ஆம் ஆண்டில் 1,461 வழக்குகளாகக் குறைந்துள்ளன.

பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால், போக்சோவில் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

காவல் நிலைய மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. இதில், அரசு வெளிப்படையாக உள்ளது. சிறிய குற்றங்கள் என்றாலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் வெளிப்படைத்தன்மை என்ன? அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.

சிபிசிஐடி அவ்வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்மந்தப்பட்டவர்கள் காவல் துறையினர் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐக்கு வழக்கை அரசு மாற்றியது. 2021 ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2024 ஆம் ஆண்டு 11,000 வழக்குகளாக அதிகரித்துள்ளன. போதைப் பொருள் தடுப்புப் பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியதாலேயே இந்த வழக்குகள் அதிகரித்துள்ளன.

காவல் நிலையத்துக்கு வரும் மக்களை எவ்வாறு அணுக வேண்டும். விசாரணையை எப்படி நடத்துவது என காவல் நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கையில் ஆகாஷ் என்பவர் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோயில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிடாமல் தடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார் தீரஜ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.