தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதற்கான இறுதிக்கட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை - கூடூர் ஆகிய ரயில் வழித்தடஙளில் 5, 6-ஆவது பாதைகள், விழுப்புரம் - திருச்சி - திருநெல்வேலி - நாகர்கோயில் வழித்தடத்தில் 3, 4 -ஆவது பாதைகள், திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - மதுரை வழித்தடத்தில் 2-ஆவது பாதை, போத்தனூர் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் 2-ஆவது பாதை அமைக்கவும் இறுதிக்கட்ட ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை ரயில்வே வாரியம் அளித்துள்ளது.
மேலும், திருச்சியில் ஜி கார்னர் பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் அமைப்பதற்கான தடையில்லாச் சான்றிதழையும் ரயில்வே வாரியமமைத்துள்ளது. இதனால், திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பாலத்துக்காக ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் மேற்கொண்டதாகக் கூறிய மதிமுக எம்.பி. துரை வைகோ, மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Summary
Permission granted to conduct final stage study for construction of additional railway tracks on 6 rail routes in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடி ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு


