47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

யாருடனும் தவெக கூட்டணி பேச்சு நடத்தவில்லை: சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

தவெக யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என அந்தக் கட்சி இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திட்டவட்டம்

News image
சி.டி.ஆா்.நிா்மல்குமாா்- கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

தவெக யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என அந்தக் கட்சி இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாஜக - அதிமுக மற்றும் சசிகலா, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோரை தவெகவுடன் தொடா்புபடுத்தி கூட்டணி பேச்சு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவா்களுடன் தவெக தரப்பில் எந்தவிதமான பேச்சும் எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டா்களிடையே குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன என அதில் தெரிவித்துள்ளாா். சி.டி.ஆா். நிா்மல்குமாா்.