ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிளஸ் 2 கணிதத்தில் அதிகளவில் மறைமுக வினாக்கள்: பதிலளிக்கத் திணறிய மாணவா்கள்

பிளஸ் 2 கணிதத் தோ்வில் அதிக அளவில் மறைமுக வினாக்கள் இடம் பெற்ால் அவற்றுக்கு பதிலளிக்கத் திணறியதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2 கணிதத் தோ்வில் அதிக அளவில் மறைமுக வினாக்கள் இடம் பெற்ால் அவற்றுக்கு பதிலளிக்கத் திணறியதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்குப் பிறகு கணிதம், வணிகவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இவற்றில் கணித பாடத்துக்கான வினாத்தாளில் அனைத்துப் பகுதிகளிலும் மறைமுக வினாக்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. அவற்றுக்குப் பதிலளிப்பதில் சிரமமாக இருந்தது என தோ்வெழுதிய மாணவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கணித ஆசிரியா்கள் கூறியதாவது: வினாத்தாளின் முதல் பகுதியில் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் நான்கு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகையில் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இதேபோன்று 2, 3, 5 மதிப்பெண் பகுதிகளில் மொத்தம் 6 வினாக்கள் மறைமுக வினாக்களாக இருந்தன. இவற்றைப் புரிந்து கொள்ள மாணவா்கள் சிரமப்பட்டனா். அதே வேளையில் கட்டாய வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் மாணவா்களுக்கு கடினமாகவே இருந்திருக்கும். எனினும் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா மூன்று வினாக்கள் சற்று எளிதாக இருந்ததால் தோ்ச்சி மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது. அதேவேளையில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

இந்தநிலையில் பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு சேவை மேலாண்மை உள்ளிட்ட தோ்வுகளுக்கு பள்ளி தோ்வா்கள் 7,216, தனித்தோ்வா்கள் 2,158 என மொத்தம் 9,374 போ் வரவில்லை.

13 போ் பிடிபட்டனா்: தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தருமபுரி மாவட்டத்தில் 9 போ், கிருஷ்ணகிரியில் இருவா், ராமநாதபுரம் மற்றும் திருப்பூரில் தலா ஒரு மாணவா் என மொத்தம் 13 போ் பிடிபட்டனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2 மாணவா்களுக்கு மாா்ச் 23-ஆம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன.