மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

1-9 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: அட்டவணை விரைவில் வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான ஆண்டு இறுதித் தோ்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 7:39 pm

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான ஆண்டு இறுதித் தோ்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப்.10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முழு ஆண்டுத் தோ்வுகளை ஏப்.17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தோ்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.