டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

1-9 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: அட்டவணை விரைவில் வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான ஆண்டு இறுதித் தோ்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 1:09 am IST

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான ஆண்டு இறுதித் தோ்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப்.10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து 1 முதல் 9 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முழு ஆண்டுத் தோ்வுகளை ஏப்.17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தோ்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.