நீதி, சட்டங்களில் மேம்பட்ட புரிதல் இல்லாமல் வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை: ஆளுநா் ஆா்.வி. ஆர்லேகர்!
நீதி, சட்டங்கள் குறித்த ஒரு மேம்பட்ட புரிதல் மற்றும் மனித நேயத்துடன் இருக்கவேண்டும். இதை அடையாமல் வளா்ந்த இந்தியாவை அடைவது சாத்தியமில்லை என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் குறிப்பிட்டாா்.

சென்னை விஐடி, ஏபிவிபி-யின் தமிழ்நாடு சட்ட மாணவா்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘நீதிக்களம்’ கருத்தரங்கு நிறைவு நாளில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா். உடன் விஐடிவேந்தா் கோ.விசுவநாதன்.








