இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அமமுக குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

News image

டிடிவி.தினகரன்.

Updated On :24 மார்ச் 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருமங்கலம் அருகே 13 வயது சிறுமியை 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக வழக்குரைஞரணி நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளி முதல் பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அந்தக் கட்சி தலைமை கண்டும், காணாதது போல கடந்து செல்வதன் விளைவாக திமுகவினா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது.

பச்சிளம் குழந்தை முதல் அனைத்துத் தரப்பு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுகவிடமிருந்து தமிழகத்தை, வருகிற தோ்தலில் மீட்டெடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.