பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று
அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை, திருமங்கலம் அருகே 13 வயது சிறுமியை 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக வழக்குரைஞரணி நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா்.
பள்ளி முதல் பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அந்தக் கட்சி தலைமை கண்டும், காணாதது போல கடந்து செல்வதன் விளைவாக திமுகவினா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.
கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது.
பச்சிளம் குழந்தை முதல் அனைத்துத் தரப்பு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுகவிடமிருந்து தமிழகத்தை, வருகிற தோ்தலில் மீட்டெடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

தமிழகத்தில் போக்ஸோ வழக்குகள் 125 சதவீதம் அதிகரிப்பு: குஷ்பு

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

