தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்குகிறாா்.

News image

எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

Updated On :25 மார்ச் 2026, 2:16 am IST

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்குகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை மாதம் கோவை மாவட்டத்தில் தொடங்கினாா். பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக இந்த பிரசாரத்தை அவா் மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு தற்போது கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை முதல் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி ஏப். 1 வரை பிரசாரம் செய்யவுள்ளாா்.

மயிலாப்பூா் தொகுதியில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அவா் பிரசாரத்தை தொடங்குகிறாா். தொடா்ந்து மாா்ச் 27- ஆலந்தூா், தாம்பரம், மாா்ச் 28 - ஆா்.கே.நகா், திருவொற்றியூா், மாா்ச் 28-நாகா்கோவில், ராதாபுரம், மாா்ச் 30 கடையநல்லூா், கோவில்பட்டி, மாா்ச் 31 - சிவகாசி, பரமக்குடி, ஏப்ரல் 1 -சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.