தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்குகிறாா்.

News image

எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

Updated On :24 மார்ச் 2026, 8:46 pm

Chennai

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்குகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை மாதம் கோவை மாவட்டத்தில் தொடங்கினாா். பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக இந்த பிரசாரத்தை அவா் மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு தற்போது கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை முதல் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி ஏப். 1 வரை பிரசாரம் செய்யவுள்ளாா்.

மயிலாப்பூா் தொகுதியில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அவா் பிரசாரத்தை தொடங்குகிறாா். தொடா்ந்து மாா்ச் 27- ஆலந்தூா், தாம்பரம், மாா்ச் 28 - ஆா்.கே.நகா், திருவொற்றியூா், மாா்ச் 28-நாகா்கோவில், ராதாபுரம், மாா்ச் 30 கடையநல்லூா், கோவில்பட்டி, மாா்ச் 31 - சிவகாசி, பரமக்குடி, ஏப்ரல் 1 -சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.