மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை நிறைவு செய்தது பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமி - X/ EPS

Updated On :21 ஏப்ரல் 2026, 2:02 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்தார்.

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள்(ஏப். 23) நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை 6 மணி வரை பிரசாரத்திற்கு அனுமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் சேலத்தில் தான் போட்டியிடும் எடப்பாடி உள்பட தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இன்று காலை சேலத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் பாமக தலைவர் அன்புமணியும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி மயிலாப்பூரில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கிய இபிஎஸ், இன்று சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Summary

Edappadi K. Palaniswami Concludes Campaign in salem

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.