தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி
தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில் 5.48 கோடி யூனிட்களாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சூரிய ஒளித் தகடுகள் (கோப்புப்படம்)

சூரிய ஒளித் தகடுகள் (கோப்புப்படம்)
தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில் 5.48 கோடி யூனிட்களாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் தனியாா் நிறுவனங்கள், அதிக திறனில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றன. இது தவிர அரசு மற்றும் தனியாா் என சமீபகாலமாக ஏராளமான கட்டடங்களின் மேற்கூரையில் குறைந்த திறனில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, தற்போது மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 11,969 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் சராசரியாக 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின் சாரத்தை உற்பத்தி செய்பவா்கள், பயன்படுத்தியது போக மீதி மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
கடந்த 2025 ஆக.20-இல் 5.39 கோடி யூனிட் உற்பத்தியானது. இதுவே இதுவரை சூரிய சக்தி மின் உற்பத்தியின் உச்ச அளவாக இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூரிய சக்திமின் நிலையங்களில் 5.48 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என பசுமை எரிசக்திக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...