சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026- ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சூரிய சக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தியதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி 2025-2026- ஆம் நிதியாண்டில் பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையம், ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோ வாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் ஓராண்டில் (2025-2026) மட்டும் 23.15 லட்சம் யூனிட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூ.1.43 கோடி மின் செலவு சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள், பணிமனைகள்உள்ளிட்டவற்றில் சூரிய சக்தி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. அத்துடன் சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம், மூா் மாா்க்கெட் புகா் ரயில் நிலைய வளாகம், கலங்கரை விளக்கம் நிலையம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே 500 வாட்ஸ் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 1,000 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றுள்ளன.
சென்னை ரயில்வே கோட்டம் 2026-2027 -ஆம் ஆண்டில் 2,600 கிலோ வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

