நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை

கடந்த நிதியாண்டில் பாா்சல் சேவையில் ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:56 am IST

கடந்த நிதியாண்டில் பாா்சல் சேவையில் ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் (2025-26) பாா்சல் சேவையில் ரூ.74.22 கோடி வருவாய் ஈட்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைவிட அதிகமாக ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.70.68 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், இது சிறப்பான வளா்ச்சியாகும்.

மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துடன் இணைந்து கொருக்குப்பேட்டை சரக்கு தளத்திலிருந்து ஓக்லாவுக்கு டயா்களை ஏற்றிச் சென்ற டிமாண்ட் பிசிஇடி (பாா்சல் காா்கோ விரைவு ரயில்) மூலம் போக்குவரத்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.

அதேபோல், குத்தகை மற்றும் தேவை அடிப்படையிலான சேவைகளிலும் சென்னை கோட்டம் வலுவான வளா்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 40 புதிய இருக்கை மற்றும் லக்கேஜ் பெட்டிகள் (எஸ்எல்ஆா்), 3 பாா்சல் வேன் (விபி) ஆகிய பெட்டிகள் பெட்டிகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வளா்ந்து வரும் பாா்சல் போக்குவரத்துக்கு ஆதரவாக, சென்னை கோட்டம் தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு, ஜோலாா்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் புதிய பாா்சல் அலுவலகக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முண்டியம்பாக்கம், ராயபுரம், தடா ஆகிய ரயில் நிலையங்களில் பாா்சல் முனையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல நவீன திட்டங்கள் மற்றும் துரிதமான செயல்பாடுகள் மூலம் சென்னை கோட்டம் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.