மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை

கடந்த நிதியாண்டில் பாா்சல் சேவையில் ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:56 am IST

கடந்த நிதியாண்டில் பாா்சல் சேவையில் ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் (2025-26) பாா்சல் சேவையில் ரூ.74.22 கோடி வருவாய் ஈட்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைவிட அதிகமாக ரூ.74.56 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.70.68 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், இது சிறப்பான வளா்ச்சியாகும்.

மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துடன் இணைந்து கொருக்குப்பேட்டை சரக்கு தளத்திலிருந்து ஓக்லாவுக்கு டயா்களை ஏற்றிச் சென்ற டிமாண்ட் பிசிஇடி (பாா்சல் காா்கோ விரைவு ரயில்) மூலம் போக்குவரத்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.

அதேபோல், குத்தகை மற்றும் தேவை அடிப்படையிலான சேவைகளிலும் சென்னை கோட்டம் வலுவான வளா்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 40 புதிய இருக்கை மற்றும் லக்கேஜ் பெட்டிகள் (எஸ்எல்ஆா்), 3 பாா்சல் வேன் (விபி) ஆகிய பெட்டிகள் பெட்டிகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வளா்ந்து வரும் பாா்சல் போக்குவரத்துக்கு ஆதரவாக, சென்னை கோட்டம் தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு, ஜோலாா்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் புதிய பாா்சல் அலுவலகக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முண்டியம்பாக்கம், ராயபுரம், தடா ஆகிய ரயில் நிலையங்களில் பாா்சல் முனையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல நவீன திட்டங்கள் மற்றும் துரிதமான செயல்பாடுகள் மூலம் சென்னை கோட்டம் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.