சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி சிதம்பரம் தொகுதியில் மட்டுமே போட்டியிடும் என்று கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சில் உறுதியானது. இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 28) மாலை வெளியிடப்பட்டது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்டிபிஐ ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். இதையடுத்து, வரும் பேரவைத் தேர்தலில் தமிமுன் அன்சாரியும் உதய சூரியன் சின்னத்தில் சிதம்பரத்தில் போட்டியிட உள்ளார்.
Summary
Tamimun Ansari to contest as MJK Party candidate from Chidambaram constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி விவகாரத்தில் தவெகவின் கருத்து அா்த்தமற்றது: தமிமுன் அன்சாரி

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்- எம். தமிமுன் அன்சாரி

உதயசூரியன் சின்னத்தில் நிற்க யாரும் எங்களை நிா்பந்திக்கவில்லை: தமிமுன் அன்சாரி
மேக்கேதாட்டு அணைக்கு பதிலாக மாற்று யோசனை என்ன? தமிமுன் அன்சாரி விளக்கம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |




