நாமக்கல்: நாமக்கல்லில் பழங்குடியின நல மாணவியர் விடுதியில் தங்கிப் பயின்ற 30 மாணவிகள், மதிய உணவு சாப்பிட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்- மோகனூர் சாலையில் பழங்குடியினர் நல மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 103 மாணவிகள் தங்கியிருந்து அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அந்த மாணவிகள் விடுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 56 பேர் தங்கி உள்ளனர். திங்கள்கிழமை மதியம் ஒரு மணி அளவில், அவர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். இந்த மாணவிகள் பள்ளிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
உடனடியாக மாணவிகள் அனைவரும் மீட்கப்பட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மாணவிகள் 22 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவிகள் அனைவரும் கொல்லிமலை பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவிகளாவர்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Sudden Illness Strikes Students at Namakkal Government Hostel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








