திருநெல்வேலிக்குப் பதிலாக சாத்தூரில் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தவுடன், இன்று மாலை பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்.
எந்த தொகுதியில் நின்றாலும் திருநெல்வேலியின் செல்லப்பிள்ளை நான். என் வாழ்நாள் உள்ள வரை திருநெல்வேலி மக்களை என்றும் மறக்க முடியாது.
நான் நெல்லையில் பலமுறை போட்டியிட்டு இருக்கிறேன். இந்த முறை நெல்லை தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அவர்கள் அங்கு போட்டியிடுகிறார்கள். அதிமுக போட்டியிட்ட சாத்தூரில் நான் போட்டியிடுகிறேன். நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நெல்லை தொகுதியில் தனி கவனம் செலுத்தப்படும் என்று கூறிக்கொள்கிறேன்.
ஏப். 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி அன்று தமிழகம் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த ஊழல்களை, குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்படும்" என்றார்.
Summary
Tamil Nadu BJP President Nainar Nagendran reply on Why he is contesting in Sattur instead of Tirunelveli
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் பின்னடைவு
முதல்வரின் தொடர் போராட்டங்கள் தேர்தலில் தோல்வியடையும்: நயினார் நாகேந்திரன்
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!

சாத்தூரில் போட்டி! நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
விடியோக்கள்

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

