திருநெல்வேலிக்குப் பதிலாக சாத்தூரில் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தவுடன், இன்று மாலை பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்.
எந்த தொகுதியில் நின்றாலும் திருநெல்வேலியின் செல்லப்பிள்ளை நான். என் வாழ்நாள் உள்ள வரை திருநெல்வேலி மக்களை என்றும் மறக்க முடியாது.
நான் நெல்லையில் பலமுறை போட்டியிட்டு இருக்கிறேன். இந்த முறை நெல்லை தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அவர்கள் அங்கு போட்டியிடுகிறார்கள். அதிமுக போட்டியிட்ட சாத்தூரில் நான் போட்டியிடுகிறேன். நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நெல்லை தொகுதியில் தனி கவனம் செலுத்தப்படும் என்று கூறிக்கொள்கிறேன்.
ஏப். 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி அன்று தமிழகம் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த ஊழல்களை, குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்படும்" என்றார்.
Summary
Tamil Nadu BJP President Nainar Nagendran reply on Why he is contesting in Sattur instead of Tirunelveli
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்

"எல்லா அமைச்சர்களும் ரீல்ஸ்தான் எடுக்கிறார்கள்!": நயினார் நாகேந்திரன்! | BJP | TVK

ரூ. 4 கோடி பணம் பறிமுதல்! சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



