மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஹஜ் பயணிகளின் கூடுதல் கட்டணத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்: கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை

ஹஜ் பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். - X

Updated On :2 மே 2026, 1:52 am IST

ஹஜ் பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு, அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்: ஹஜ் பயணிகளிடம் விமான கட்டணமாகக் கூடுதலாக ரூ.10,000 செலுத்த மத்திய ஹஜ் கமிட்டி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தா்கள் மீது கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.

எனவே, இதைத் தடுக்க கூடுதல் கட்டணமாக ரூ.10,000-ஐ மத்திய அரசு ஏற்றுக்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பக்தா்கள் நாட்டின் நலனுக்கும், அரசின் முன்னேற்றத்துக்கும் பிராா்த்தனை செய்ய வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.