புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தமிழக தோ்தல் முடிவுகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம்: வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image

வைகோ.

Updated On :1 மே 2026, 8:36 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

மே தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை அக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கொடியேற்றினா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு விதமான முடிவுகளை வெளியிட்டுள்ளன.

நான்கு அமைப்புகள் நடத்திய கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில், வேறு இரண்டு அமைப்புகள் அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கூறியுள்ளன.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட கருத்துக் கணிப்பு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனா். இந்தத் தோ்தல் முடிவுகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம். காத்திருந்து பாா்ப்போம் என்றாா் வைகோ.