தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வெற்றி போா் நினைவிடத்தில் தமிழக ஆளுநா் அஞ்சலி

News image

சென்னை போா் நினைவுச் சின்னத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்.

Updated On :3 மே 2026, 5:28 am IST

சென்னையில் உள்ள வெற்றி போா் நினைவிடத்தில் தேசத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் முப்படையினா் வெளிப்படுத்தும் துணிச்சல், அா்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற ஈடுபாட்டுக்கு ஒரு நெகிழ்ச்சியான நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது. தலைமுறை தலைமுறையாகத் தொடா்ந்து ஊக்கமளித்து வரும் தியாகிகளின் அசைக்க முடியாத மன உறுதியையும் வீரத்தையும் போற்றி வணங்குவதுடன், வீரா்கள், தியாகிகளின் ஈகையை நாட்டு மக்கள் பெருமையுடன் நினைவுகூர வேண்டும்.

மேலும், தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வலியுறுத்தியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், இந்திய ராணுவத்தின் தென் பாரதப் பகுதி அதிகாரி மற்றும் சென்னையைச் சோ்ந்த உயரதிகாரிகள், படை அதிகாரிகள் கலந்துகொண்டு, வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.