குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள போா் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
நாட்டின் சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைப்பிரிவின் வீரா்களைக் கௌரவிக்கும் வகையில், உயா் அதிகாரிகளின் வருகையின்போது குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் படைப்பிரிவு சாா்பில் இதுபோன்று மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்மேற்குப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியும், மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கா்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தா் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராணுவ அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது

ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்

பாகிஸ்தான் போா் நாயகன் பிரிகேடியா் வி.ஆா். சுவாமிநாதன் காலமானாா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


