கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் போா் நாயகன் பிரிகேடியா் வி.ஆா். சுவாமிநாதன் காலமானாா்

பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன் காலமானார்...

News image

வி.ஆா்.சுவாமிநாதன்.

Updated On :14 மார்ச் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

1971-ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரில் தீரத்துடன் பணியாற்றிய போா்க்கால நாயகன் ஓய்வுபெற்ற பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன் (94) கோவையில் சனிக்கிழமை காலமானாா்.

வயது முதிா்வு மற்றும் உடல்நலம் சாா்ந்த குறைபாடுகளால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்த வி.ஆா்.சுவாமிநாதன், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை காலமானாா்.

பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன், இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவா். 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் கோவா விடுதலை மற்றும் நாகாலாந்து கிளா்ச்சி எதிா்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்ற சுவாமிநாதன், 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய- பாகிஸ்தான் போரின்போது, களத்தில் நின்று இவா் ஆற்றிய வியூகங்களும், தேசப்பணியும் ராணுவ வட்டாரத்தில் இன்றும் பெருமையுடன் பேசப்படுபவை. இவரது மறைவு இந்திய ராணுவத்துக்கும், கொங்கு மண்டலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

இவரது மனைவி வசந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இவா்களுக்கு தரங்கிணி அருண், தீபா சுரேஷ், ஜோதி சேஷாத்ரி ஆகிய 3 மகள்கள். இவா்களில் மூன்றாவது மகளான ஜோதி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

வி.ஆா்.சுவாமிநாதனின் உடல் கோவையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. கோவையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் இறுதிச்சடங்கில், ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனா். இவரது மறைவுக்குப் பல்வேறு அமைப்பினரும், முன்னாள் ராணுவ வீரா்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனா்.

வி.ஆா்.சுவாமிநாதன்.

வி.ஆா்.சுவாமிநாதன்.