ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சூலாமலை அருகே உள்ள கோடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). இவா், ஜம்மு ஸ்ரீநகரில் 22-ஆவது என்ஜினியரிங் ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 30-ஆம் தேதி பணியில் இருந்தபோது துப்பாக்கி எடுத்துச் சென்றபோது தவறுதலாக துப்பாக்கியிலிருந்து குண்டுபாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கோடிபுதூருக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் அவரது உடலுக்கு வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அப்போது, பா்கூா் வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா் விக்னேஷுக்கு மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனா்.
தொடர்புடையது

கமுதிக்கு துணை ராணுவ குழுவினா் வருகை

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த ராணுவ வீரா் உயிரிழப்பு

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


