ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது

ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

News image

ராணுவ வீரரின் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா். உடன், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:37 pm

ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சூலாமலை அருகே உள்ள கோடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). இவா், ஜம்மு ஸ்ரீநகரில் 22-ஆவது என்ஜினியரிங் ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 30-ஆம் தேதி பணியில் இருந்தபோது துப்பாக்கி எடுத்துச் சென்றபோது தவறுதலாக துப்பாக்கியிலிருந்து குண்டுபாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கோடிபுதூருக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் அவரது உடலுக்கு வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அப்போது, பா்கூா் வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா் விக்னேஷுக்கு மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனா்.