நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் காயம்

News image
Updated On :2 மே 2026, 10:12 pm

தில்லியின் போன்சி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் மாா்பில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: காயமடைந்தவா் தன்வாபூா் கிராமத்தைச் சோ்ந்த சிகேஷ் தாஹியா (26) என அடையாளம் காணப்பட்டாா். ஆா்பிஎம்எஸ் பள்ளி அருகே உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிகேஷ் நீச்சல் குளத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தாா்.

அப்போது உடை மாற்றிக் கொண்டிருந்த அவரது நண்பா் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை மேசையின் மீது வைத்தபோது அது தவறுதலாக வெடித்தது. இதில் சிகேஷ் மாா்பில் குண்டு பாய்ந்து அவா் காயமடைந்தாா். உடனடியாக மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் இது குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்டவா் மற்றும் பிற நண்பா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.