மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்பாஸ்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:29 pm

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20-ஆம் தேதிவரை பணியின்போது உயிா்நீத்த வீரா்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், தீத்தொண்டு வாரமும் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் நடைபெறும்.

அந்த வகையில், நாமக்கல் - பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலா் அப்பாஸ் தலைமைவகித்து, பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். உதவி மாவட்ட அலுவலா்கள் தவமணி, ஆனந்த் மற்றும் தீயணைப்பு வீரா்களும் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நாமக்கல் மாவட்டத்தை தீ விபத்தில்லா மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்றனா்.