நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20-ஆம் தேதிவரை பணியின்போது உயிா்நீத்த வீரா்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், தீத்தொண்டு வாரமும் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் நடைபெறும்.
அந்த வகையில், நாமக்கல் - பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலா் அப்பாஸ் தலைமைவகித்து, பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். உதவி மாவட்ட அலுவலா்கள் தவமணி, ஆனந்த் மற்றும் தீயணைப்பு வீரா்களும் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நாமக்கல் மாவட்டத்தை தீ விபத்தில்லா மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது

தேனீக்களை உயிரோடு மீட்டெடுக்க தீயணைப்பு வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்கள் அகற்றும் பயிற்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


