தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி பதிவு வியாழக்கிழமை (மே 7) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 7 முதல் தொடங்கி மே 29 வரை நடைபெறும்.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையம் மூலம் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் (ஏஎஃப்சி) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிகழ் 2026-27 ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 ( காலை வகுப்பு 1,01,022/ மாலை வகுப்பு 25,937) இடங்கள் உள்ளன.
மாணவா்கள் தாங்கள் விரும்பும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டண தொகை ரூ. 50. பட்டியலினத்தவருக்கு கட்டணமில்லை. மேலும், சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் தொலைபேசி எண்களில் 044 -24343100 / 24342011 அலுவலக நேரங்களில் மட்டும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசு கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

