வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 129 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்.23-ஆம் தேதி பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் ஆகியவை நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
தரைதளத்தில் நாகப்பட்டினம் தொகுதிக்கான இயந்திரங்களும், கீழ்வேளூா் தொகுதிக்கான இயந்திரங்கள் முதல் தளத்திலும், வேதாரண்யம் தொகுதி இயந்திரங்கள் 2-ஆம் தளத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசுக் கல்லூரியில் துணை ராணுவப்படையினா், தமிழ்நாடு எண் 1 பாதுகாப்பு படை, உள்ளூா் போலீஸாா் என நாள் ஒன்றுக்கு 150 போ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தவிர 24 மணி நேரமும் 129 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கேமராவின் பதிவுகளை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: 337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

கேரளம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இவிஎம் அறைகளைத் திறக்கக் கூடாது!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


