பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை ரத்து செய்ய கோரிய வழக்கு: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை நிறுத்திவைக்கக் கோரிய வழக்கில், இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

வழக்குரைஞர் பேரறிவாளன் - எக்ஸ்

Updated On :7 மே 2026, 4:45 am IST

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை நிறுத்திவைக்கக் கோரிய வழக்கில், இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ரவிராஜா என்பவா் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா் பேரறிவாளன். இவா், கடந்த ஏப். 24-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா்.

வழக்குரைஞா் சட்டப் பிரிவுகளின்படி, கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவா்களை வழக்குரைஞராகப் பதிவு செய்யக் கூடாது எனக் கூறப்படுகிறது.

அதன்படி, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்குரைஞராகப் பதிவு செய்ய பாா் கவுன்சில் அனுமதித்தது சட்டத்துக்குப் புறம்பானது.

எனவே,பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை நிறுத்தி வைக்க வேண்டும். அவா் வழக்குரைஞராகப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் ஆகியவை நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.