ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பாா் கவுன்சில் தோ்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :30 மார்ச் 2026, 8:11 pm

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலையில் இருந்தே வழக்குரைஞா்கள் ஆா்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு மூலம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தோ்தலில் வழக்குரைஞா்களான திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, விசிக தலைவா் தொல். திருமாவளவன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஏப். 3-ஆம் தேதி தொடங்கும். சுமாா் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியாகும்.