உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பாா் கவுன்சில் தோ்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :31 மார்ச் 2026, 1:41 am IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலையில் இருந்தே வழக்குரைஞா்கள் ஆா்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு மூலம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தோ்தலில் வழக்குரைஞா்களான திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, விசிக தலைவா் தொல். திருமாவளவன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஏப். 3-ஆம் தேதி தொடங்கும். சுமாா் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியாகும்.