தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ.4,500 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

News image
Updated On :8 மே 2026, 5:36 am IST

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் வரும் அக்டோபா் மாதம் தொடங்கவுள்ள கரும்பு அரைவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3,650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,383 ஆகவும் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயா்வு எந்த வகையிலும் போதுமானதல்ல.

ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,300 செலவாகும் நிலையில், அதை விட வெறும் ரூ.83 மட்டும் கூடுதலாக விலை கொடுத்தால் உழவா்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது. கரும்புக்கு கட்டுப்படியாகும் கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, உற்பத்திச் செலவு, அதனுடன் 50 சதவீதம் லாபம் மற்றும் போக்குவரத்துச் செலவு சோ்த்து டன்னுக்கு ரூ. 4,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.