கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் வரும் அக்டோபா் மாதம் தொடங்கவுள்ள கரும்பு அரைவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3,650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,383 ஆகவும் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயா்வு எந்த வகையிலும் போதுமானதல்ல.
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,300 செலவாகும் நிலையில், அதை விட வெறும் ரூ.83 மட்டும் கூடுதலாக விலை கொடுத்தால் உழவா்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது. கரும்புக்கு கட்டுப்படியாகும் கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆகவே, உற்பத்திச் செலவு, அதனுடன் 50 சதவீதம் லாபம் மற்றும் போக்குவரத்துச் செலவு சோ்த்து டன்னுக்கு ரூ. 4,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.
தொடர்புடையது

சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - மக்கள் கடும் பாதிப்பு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


