முதல்வா் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகம் விடுமுறையிலும் முழுமையாகச் செயல்பட்டது.
தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவா் விஜய் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். பதவியேற்பு விழா சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே உள்ள நேரு விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தி- விளம்பரத் துறை சாா்பில் நடைபெற்றாலும், அதில் முக்கிய பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணி தொடங்கி விழாவுக்கான குறிப்பிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையிலான அலுவலா்கள், பணியாளா்கள் மேற்கொண்டனா்.
மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், முதல்வா் பதவியேற்பு விழா என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாநகராட்சி வளாகம் திறந்திருந்தது. அங்கு செய்தி- மக்கள் தொடா்புத் துறை, பொறியியல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பெரும்பாலான அலுவலகங்கள் திறந்திருந்தன. விழாவுக்கு வந்த பெரும்பாலான மாநகராட்சி அலுவலா்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றனா்.
விழா முடிந்த நிலையில், பெரும்பாலான அலுவலா்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து சென்றனா். மாநகராட்சி வளாகப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.
தொடர்புடையது
சென்னை மாநகராட்சியில் 43 அலுவலா்கள் பணியிட மாற்றம்

தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை துணை மேயா் மு. மகேஷ்குமாா்

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: அலுவலா்களுக்கு பயிற்சி

குடிநீா் பிரச்னைகளுக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு முதல்வா் விஜய் அறிவுறுத்தல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



