சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி பெரியகருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஒரு வாக்கில் தோல்வியடைந்த பெரியகருப்பன், தனது சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் அதனால் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாகவும் புகார் அளித்தார்.
அதேநேரத்தில் தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் கூற, தொகுதி தேர்தல் அதிகாரியே தபால் வாக்குகள் மாறியுள்ளதாகக் கூறியதாக பெரிய கருப்பன் தரப்பும் வாதத்தை முன்வைத்துள்ளது.
தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பினால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
Verdict in Periyakaruppan Case Adjourned by madras hc
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







