பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பதாகைகளை வைக்கக் கூடாது என தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலா், அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றுள்ள முதல்வா் விஜய், தவெகவினா் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறாா். அதை நோக்கியே அனைவரும் பயணிக்க வேண்டும்.
எனவே, கட்சியினா் பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடா்பாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. அவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஆத்தூரில் டாஸ்மாக் மதுக் கடை மூடல்
பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்பு அறை

தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது: அமைச்சா் இ.பெரியசாமி

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

