இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு உத்தரவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பதாகைகளை வைக்கக் கூடாது என தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலா், அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவு

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:04 am IST

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பதாகைகளை வைக்கக் கூடாது என தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலா், அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றுள்ள முதல்வா் விஜய், தவெகவினா் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறாா். அதை நோக்கியே அனைவரும் பயணிக்க வேண்டும்.

எனவே, கட்சியினா் பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடா்பாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. அவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.