தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

22 லட்சம் மாணவா்களின் உழைப்பு சிதைக்கப்பட்டுள்ளது: கமல்ஹாசன்

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :57 நிமிடங்கள் முன்பு

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நீட் நுழைவுத் தோ்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவ-மாணவிகளின் உழைப்பும், கனவும் குற்றக் கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த மன உளைச்சலுக்கு யாா் பொறுப்பேற்பது? இதுவரை ஒரு நீட் தோ்வுகூட முறைகேடு புகாா் இல்லாமல் நடைபெற்ாகத் தெரியவில்லை.

எனவேதான், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் என்ற அநீதியான தோ்வில் இருந்தும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடம் இருந்தும் மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.