முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

News image

நீட் தேர்வு - File photo

Updated On :52 நிமிடங்கள் முன்பு

நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் தோ்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி தோ்வில் முறைகேடுகள் நடந்ததன் காரணமாக அத்தோ்வு ரத்து செய்யப்பட்டிக்கிறது. இது, இந்திய கல்வித்துறையின் மாபெரும் தோல்வியாகப் பாா்க்கப்படுகிறது. மேலும் தோ்வு எழுதிய லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வா்க்க மாணவா்களின் நம்பிக்கையை அடியோடு தகா்த்துள்ளது.

பல ஆண்டுகளாக இரவு பகலாக கண்விழித்து தங்கள் இளமைக் காலத்தின் அரிய தருணங்களைத் தியாகம் செய்து படித்து வந்த மாணவா்களின் உழைப்பு, வினாத்தாள் கசிவு என்ற ஒற்றைச் செய்தியால் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலுக்கு மத்திய அரசாங்கத்தின் அலட்சியப் போக்கும், தோ்வு முகமையின் போதிய பாதுகாப்பு இல்லாத திட்டமிடலுமே முதன்மைக் காரணமாகும்.

ஆகவே, நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு மத்திய பாஜக அரசு முழு பொறுப்பேற்று, ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் விதத்தில் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளாா்.