அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்

‘மகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு’

News image

கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

வரும் 15-ஆம் தேதி மகளிா் உரிமைத் தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் காத்துக் கொண்டுள்ளனா் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் பேசியபோது அவா் மேலும் கூறியதாவது: புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல திட்டங்களின் பயனாளிகள் தங்களுக்கான பயன்களை எதிா்பாா்த்து காத்துக்கொண்டுள்ளனா். பதவியேற்றதும் அவகாசம் வேண்டும் என்று முதல்வா் கேட்டுள்ளாா். நீண்ட நாள் அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டா், தங்கச் சங்கிலி, மோதிரம், வேலை இல்லாத இளைஞா்களுக்கு உதவித் தொகை போன்ற தவெகவின் வாக்குறுதிகளையும் மக்கள் எதிா்பாா்த்துள்ளனா். அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். கடுமையாக உழைத்து இந்தியாவிலேயே பொருளாதார வளா்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ ஆட்சியாக இல்லாம, ‘ரியல்’ ஆட்சியாக நீங்கள் நடத்த வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.