சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் மிகச்சிறப்பான முறையில் முன்மாதிரியாகத் தமிழ்நாடு செயல்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே திறன்வாய்ந்த சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகம் (லீட்ஸ்) குறித்த 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை, புது தில்லியில் மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை வெளியிட்டாா்.
அந்த அறிக்கையின்படி, சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான முறையில் முன்மாதிரியாக செயல்பட்ட பிரிவில், கடலோர மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும், வடகிழக்கு மாநிலங்களில் மிசோரமும், யூனியன் பிரதேசங்களில் தில்லியும் இடம்பிடித்துள்ளன.
இந்த மாநிலங்களும், தில்லியும் கொள்கை, உள்கட்டமைப்பு, சேவை விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளில் நீடித்த தனிச்சிறப்பை வெளிப்படுத்தி, மிகச் சிறந்த செயல்திறன் கொண்டவையாக உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

5 மாநிலங்களில் ரூ. 408 கோடி! தமிழ்நாட்டில் ரூ. 189 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

