கோடைக்காலத்தில் மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க மலைப்பகுதிகளைச் தேடிச் சென்று குளுமையை அனுபவிக்கும் நிலையில், மக்கள் இருக்கும் பகுதியே குளுகுளுவென மாறினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இன்று புதுச்சேரி மக்களுக்கும் இருக்கிறது.
வங்கக் கடலின் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரியில் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப்பகுதி என புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இதனால் கடந்த ஒரு சில மாதங்களாக கோடை வெப்பத்தில் சிக்கித் தவித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.
Summary
People are happy after 3 hours of generous rain in Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

ஆரணி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

